Sunday, January 6, 2013

துரோகத்திற்கு முந்து

இணைக்க
. . . ஆகவே
துரோகத்திற்கு முந்திக்கொள்.

இருவருக்கும் இடையிலிருப்பது
நட்புறவு இல்லை.
அது ஒரு
குரு-சிஷ்யன் உறவு.

நீ உணர்த்தும் வலி
அவன் விளங்கிக்கொள்ளும் பாடம்.
உன் நடிப்பே கொலைவாள்
நீ பின்னும் சூழ்ச்சியே
கொலைக்களம்.

உனது அதீத கற்பனைகளின் ஏவல்
அவனைச் சூழும் தரித்திரம்.

நீ குடிக்கும் மதுவும்
புகைக்கும் சிகரெட்டின் தீக்குச்சியும்
நீ புணரும் யோனியும்
அவன்தான்.

வாழ்வின் நோய்
கடைசியில்-
என்ன கொண்டு வந்து சேர்த்துவிடப் போகிறது ?

ஆகவே-
துரோகத்திற்கு முந்து
இருவருக்கும்
வாரிசுகள் உள்ளன.

- மகரந்தன்.

No comments: