Wednesday, January 5, 2011

குழந்தை அம்மாவுக்கு

இணைக்க

 குழந்தை அம்மாவுக்கு

இல்லை, இல்லை
நான் ஆடைகளை அணிந்துகொள்ள விரும்பவில்லை
இந்த மேல்சட்டையை
இந்த கால்சட்டையை
எடுத்துச் செல்
நான் ஆடைகளை அணிந்துகொள்ள மாட்டேன்.


தென்றலும் சூரிய ஒளியும்
ஆடைகளை அணிந்து கொள்கின்றனவா !
அந்த அம்மண சிறுநதி
மேல்சட்டையையும் கால்சட்டையையும்
ஏன் அணிந்துகொள்ளவில்லை ?

பார் !
அந்த மரமும் அதன் நிழலும்
ஒவ்வொரு நாளும்
கண்ணாமூச்சி ஆடுவதை
யார் பள்ளிக்கு போகிறார்கள்
மயிலும் அணிலும் பாடம் படிக்கின்றனவா ?
அந்த தெருவோர சோம்பேறி வேப்பமரம் ஒரு முட்டாள்
அதுகூட எவ்வளவு அன்பாக இருக்கிறது
பட்டாம்பூச்சிகள் தூர தூரமாக போகின்றன
மேகங்கள்
நதியிலும் குளத்திலும் மூழ்கி குளிக்கின்றன
யாராவது அவைகளைக் கண்டிக்கிறார்களா ?

அம்மா ....
நான் உனது மகனில்லை
அல்லது நீ எனது தாயில்லை
இதற்குமேல் இப்போது
நான் உன்னிடம் பேசமாட்டேன்

எனது தாயானவள்
உண்மையிலேயே நன்மை விளைவிக்கும்
அந்த சிறு தேவதைதான்.

எனது மேல்சட்டையை, கால்சட்டையை
பள்ளிக்கூட பையை
நான் வீசி எறிவேன்
நீ அதைப் பார்ப்பாய்.

எனது தாய் - அந்த சிறு தேவதை
எனக்காக ஒரு ஜோடி இறக்கைகளைத்
தைக்கச்சொல்லி தையற்காரனைக் கேட்பாள்
அது எனக்கு ஒரு உறுதியான குருட்டு செருக்கைத் தரும்
மணியோசையோடு படிக்க
நான் பள்ளிக்குப் போக வேண்டியதில்லை
ஆனால் தொல்லையின்றி
குளத்தில் குளிப்பேன்
ஒரு கருப்பு திருடனாவேன்;
இரவில் ஆந்தையைப்போல்
மற்றவர்களைப் பயமுறுத்துவேன்
வியக்கும் வகையில் சற்றென்று மறைந்து போவேன்.

அம்மா...
நீ என்னைத் தேடியபடி கேட்பாய்
"ஓ... என் மகன் எங்கே? "
அந்த நேரத்தில் -
நான் தூர தூரமாக பறந்து போயிருப்பேன்
மேகங்களைத் தொட.
முடியுமானால் -
பறந்துகொண்டிருக்கும்போது
சோர்ந்துபோனால்
நான் ஆழ்த்து துயில்வேன்
எனது தாய்,
அந்த சிறு தேவதையின் மடியில்.

                                                            - ரமேஷ் பரேக்

குஜராத்தி மொழியிலிருந்து
ஆங்கிலத்தில் : ராகேஷ் ராவ்

தமிழில் : மகரந்தன்

மொழிபெயர்ப்பு கவிதை 

No comments: