Monday, January 7, 2013

முதுகெலும்பற்றவன்

இணைக்க
தானாகவே மூளை சுவாசிக்க
தானாகவே இதயம் துடிக்க
துடுப்பு இல்லாமல் நீந்துகிறேன்.

எல்லை கடந்து
இலக்கு இன்றி
நடந்து கொண்டிருக்கிறேன்
ஒரு பேரழிவின் நடுவில்.

ஒரு பூனையின்
கூரிய நகமுனையில் சிக்கிய
நூல் கண்டைப்போல
ஒரு கட்டுக்கதையின்
கூர் வெளிச்ச முனையில்
சிக்குண்டு கிடக்கிறது எதிர்காலம்.

உள்வாங்கிய வயிற்றில்
வலியின் மிச்சம்
இன்னும் இருக்கிறது.

தலை சுற்றுகிறது
மூளை வேலைசெய்வதால்.

வாழ்வின் எச்சம்
குப்பையில் வீழ்கிறது.

முதுகெலும்பை அழுத்திக்கொண்டு
முதுகின்மீது-
ஒரு கரடி உட்கார்ந்திருப்பது போல் உணர்வு.

முதுகெலும்பா. . . ?
அதுதான் எனக்கில்லையே !

                                                                    - மகரந்தன்

No comments: