Sunday, January 6, 2013

துரோகத்திற்கு முந்து

இணைக்க
. . . ஆகவே
துரோகத்திற்கு முந்திக்கொள்.

இருவருக்கும் இடையிலிருப்பது
நட்புறவு இல்லை.
அது ஒரு
குரு-சிஷ்யன் உறவு.

நீ உணர்த்தும் வலி
அவன் விளங்கிக்கொள்ளும் பாடம்.
உன் நடிப்பே கொலைவாள்
நீ பின்னும் சூழ்ச்சியே
கொலைக்களம்.

உனது அதீத கற்பனைகளின் ஏவல்
அவனைச் சூழும் தரித்திரம்.

நீ குடிக்கும் மதுவும்
புகைக்கும் சிகரெட்டின் தீக்குச்சியும்
நீ புணரும் யோனியும்
அவன்தான்.

வாழ்வின் நோய்
கடைசியில்-
என்ன கொண்டு வந்து சேர்த்துவிடப் போகிறது ?

ஆகவே-
துரோகத்திற்கு முந்து
இருவருக்கும்
வாரிசுகள் உள்ளன.

- மகரந்தன்.

Saturday, November 5, 2011

வாழ்நாள் சாதனையாளர் விருது

இணைக்க

வாழ்நாள் சாதனையாளர் விருது  

புதுவை மாநில படைப்பாளிகள் கூட்டமைப்பு (நாற்பது கலைக் குழுக்கள் ஒருங்கிணைந்தது) 02.10.2011 அன்று நடத்திய முத்தமிழ் விழாவில் கவிஞர் மகரந்தனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது. புதுச்சேரி முதலமைச்சரின் பாராளுமன்ற செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு மு. வைத்தியநாதன் விருதை வழங்கினார்.




Saturday, October 29, 2011

விகடனில் என் ஊர்

இணைக்க

ஆனந்த விகடன் - என் விகடனில் "என் ஊர் - நைனார்மண்டபம்"    




Friday, August 19, 2011

லெனின் தங்கப்பாவுக்கு சாகித்திய அகதெமி விருது

இணைக்க
லெனின் தங்கப்பாவுக்கு சாகித்திய அகதெமி விருது 




Friday, August 5, 2011

புதுச்சேரியில் சாகித்திய அகாதெமி இலக்கியத் திருவிழா

இணைக்க
ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 150 வது பிறந்த நாளையொட்டி சாகித்திய அகாதெமி சார்பில், 2011 ஜூலை29ஆம் தேதி தொடங்கி,  அகஸ்ட் 3ஆம் தேதி வரை ஆறு நாட்கள் புதுச்சேரி வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்ற  புத்தகக் கண்காட்சியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் கலை பண்பாட்டு அமைச்சர் திரு பி.எம்.எல். கல்யாணசுந்தரம் அவர்கள்,  ஜூலை29ஆம் தேதி  தொடங்கிவைத்தார்.  அருகில், சட்ட மன்ற உறுப்பினர் திரு க. லட்சுமிநாராயணன், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் மகரந்தன், சாகித்திய அகாதெமி தென்மண்டலச் செயலர் அ.சு. இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். 





தென்மண்டலச் செயலர் அ.சு.இளங்கோவன் வரவேற்புரை ஆற்றுகிறார். 

விழாவில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர். 

மகரந்தன் தலைமையுரை ஆற்றுகிறார். 


மாண்புமிகு கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு பி.எம்.எல். கல்யாணசுந்தரம் அவர்களை சால்வை அணிவித்து கெளரவிக்கிறார் தென்மண்டலச் செயலர் இளங்கோவன் 


சட்ட மன்ற உறுப்பினர் திரு க. லட்சுமிநாராயணன் அவர்களை கெளரவிக்கிறார் மகரந்தன் 


எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்கள் கௌரவிக்கப்படுகிறார்.




புத்தகக் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிடுகிறார் அமைச்சர் திரு . கல்யாணசுந்தரம் அவர்கள். 

சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் வாழ்த்துரை 

எழுத்தாளர் கி.ரா. அவர்களின் சிறப்புரை 

சாகித்திய அகாதெமி புதுச்சேரி பொறுப்பாளர் புருஷோத்தமன் அவர்களின் நன்றியுரை. 

சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள கவிஞர் தமிழொளி கவிதை நூலினை அமைச்சர் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறார், சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் மகரந்தன். 

Monday, July 25, 2011

புதுச்சேரியில் சாகித்திய அகாதெமியின் இலக்கியத் திருவிழா

இணைக்க

புதுச்சேரியில் சாகித்திய அகாதெமியின் இலக்கியத் திருவிழா

ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 150ஆவது பிறந்த நாளையொட்டி சாகித்திய அகாதெமி புதுச்சேரியில் 6 நாட்கள் புத்தக கண்காட்சியும் ஒவ்வொரு நாள் மாலையிலும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது.  இலக்கிய அன்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேம். 

நாள் : 29.07.2011 முதல் 03.08.2011 வரை  
இடம் : வர்த்தக சபை, என்.1 , சுய்ப்ரேன் வீதி, புதுச்சேரி-1













Friday, July 22, 2011

கவிஞர் சிற்பி பவள விழா அழைப்பிதழ்

இணைக்க


கவிஞர் சிற்பி பவள விழா அழைப்பிதழ் 

நாள் : 30 & 31.07.2011
இடம் : சரோஜினி நடராசன் அரங்கம் 
கிக்காணி மேல்நிலைப்பள்ளி, கோவை - 2  

 





Thursday, July 21, 2011

இளையோர் பன்மொழி கவியரங்கம்

இணைக்க

இளையோர் பன்மொழி கவியரங்கம்

சாகித்திய அகாதெமி சார்பில் கர்நாடக மாநிலம், தார்வார் பகுதியில் நடைபெற்ற ரவீந்திரநாத் தாகூர் 150௦ஆவது பிறந்த நாளையொட்டி 18-07-2011 அன்று நடைபெற்ற இளையோர் பன்மொழி கவியரங்கத்தில் மகரந்தன் மற்றும் பிற மொழி கவிஞர்கள். 





புத்தக கண்காட்சி-இலக்கிய நிகழ்ச்சிகள்

இணைக்க

ரவீந்திரநாத் தாகூர் 150௦ஆவது பிறந்த நாளையொட்டி சாகித்திய அகாதெமி சார்பில் 2011 ஜூலை 17 முதல் 21 வரை புத்தக கண்காட்சி மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள், கர்நாடக மாநிலம்,  தார்வார் மாவட்டத்தில் உள்ள கன்னட குலபுரோஹித வெங்கடராவ் பவனில் நடைபெற்றது.  இதில் சாகித்திய அகாதெமி தென்மண்டல செயலர்,  அ.சு. இளங்கோவன், புகழ்மிகு கன்னட கவிஞர் சந்திரசேகர் பாட்டில், சாகித்திய அகாதெமி கன்னட ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு சித்தலிங் பட்டன்ஷெட்டி,  சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினரும் தமிழ் ஆலோசைக்குழு உறுப்பினருமான மகரந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.