Tuesday, December 21, 2010

மாணவன்

இணைக்க
மாணவன்


வெகுநாட்களாக
ஒரு மயிலையும் நான் காணவில்லை
அல்லது
நட்சத்திரங்களின் இசை ஊடே
அலைகளை எண்ணியதில்லை

தெளிவற்ற மனதிற்கு பின்னால்
சென்றுவிட்டன
பெற்றோரின் முகங்கள்
எங்கு நான் சென்றாலும்
கேள்விகள் பல
என்னை உற்று நோக்குகின்றன.

ஒரு மோசமான வலை
என்னை மூடிக்கொண்டு சொல்கிறது
"செய் அல்லது செத்து மடி"
எனது கைகள், உதடுகள்,
மூக்கு மற்றும் காதுகள்
போல்ட்டும் நட்டும் இட்டு
முடுக்கப்பட்டன.
ஓர் உயிருள்ள மீனைப்போல்
ஒரு கொக்கியிலிருந்து
தொங்கிக்கொண்டிருக்கிறேன்.

வெகுநாட்களாக
நான் எனது ஊருக்குச் செல்லவில்லை
அல்லது
எனது காதுமடல்களை அடிக்கடி மகிழ்வூட்டும்
எனது தாத்தாவின் உரையாடல்களை
நான் பகிர்ந்து கொள்ளவில்லை.

காலை நேர நட்சத்திர ஒளியில்
எனது கனவு வெளி
அடிக்கடி காணாமல் போகிறது.
ஒரு கடவுளின் கோபச்சக்கரத்தில்
ஓர் உயிருள்ள பிணம்
துண்டு துண்டாய் கிழிந்து போகிறது;
தன் தலையை உயர்த்தி
குழப்பக் கட்டங்கள், புதிர்களின் நெரிசலின் ஊடே.

                                                           - அஸ்வினி குமார் மிஸ்ரா

ஒரிய மொழியிலிருந்து
ஆங்கிலத்தில் : ரோஹினி காந்தா முகர்ஜி

தமிழில் : மகரந்தன்





2 comments:

arasan said...

அருமையான பதிவு

Anonymous said...

நன்றி நண்பரே.