Saturday, December 18, 2010

இதயத்திலிருந்து விழிவரை

இணைக்க



இதயத்திலிருந்து விழிவரை
நீர் நிரப்பப்படும்
அதன்பிறகு
நீ ஏரியைக் கண்டடைவாய்.

சீக்கிரம் !
உன்னால் சாலைக்கு வர இயலாது
ஒருமுறை
வானம் நினைவுகளால் மனதை நிறைத்தது.

நதி கொண்டுவந்தது
கானல் நீரின் விலாசத்தை;
காகிதப் படகு சொன்னது
நீந்துவது சாத்தியமென்று.

நான் என்னை ஒரு விளக்காய்
வெளிச்சமாக்கிக்கொண்டால் என்ன ?

நீ ஒரு கடுங்காற்றாய் வீசு !

நான் வாழ்க்கை என்பதை
நீ ஒப்புகொள்ளாவிட்டால்,
மிக நன்று -
ஆனால் அதிலிருந்து வெளியேற்றப்படுவாய்
தவறாக வழி நடத்தப்படுவாய்.

இன்று,
மிகப்பெரிய முயற்சிகளால்
நான் என்னை மூடியிருக்கிறேன்.

இப்போது-
பல ஆண்டுகளுக்குப் பிறகு
நான் என்னை மாய்க்கிறேன்.

ஒரு முத்தைத் துளையிடுவது
உனக்கு சாத்தியமாகலாம்.
ஆனால்,
விரல் நுனியில் படரும்படி
கண்ணீர்த் துளிகளைத் துடைக்க முடியுமா ?

நான் மரிக்கிறேன்
என்னைப் பிடிக்கும் விளையாட்டில்
உன்னால் முடிந்தாலும் என்னைக் காணாதே.

என்னைப் புதைக்கும்முன்
நீ உன்னை மறைத்துக்கொள்.

                   - ரவீந்தர பரேக்
    
    குஜராத்தி மொழியிலிருந்து 
    ஆங்கிலத்தில் : திலீப் ஜாவேரி
          தமிழில் : மகரந்தன்




1 comment:

arasan said...

நல்ல பதிவு நண்பரே ..