Saturday, August 1, 2009

தவளைக் கூச்சல்

இணைக்க

இராமனுக்காய்த் தவமிருந்தேன்
பலனில்லை.
அவன் தம்பியாவது ?
அதற்கும் வழியில்லை.

சரி
வேறு எவனாவது ?
..... .... .... .... .....

பொறுத்துப் பார்த்தேன்
வேறு வழி தெரியவில்லை
பக்கத்து வீட்டு இராவணனைக்
கடத்திவிட்டேன்.

அங்கே என்ன
தவளைக் கூச்சல்
என் கற்பைப் பற்றி.

- மகரந்தன்

No comments: