Tuesday, February 23, 2010

சொரணையுள்ள சுடுகாட்டுப் பிணங்கள்

இணைக்க
கேட்பாரற்று
குப்புறக்கிடக்கும்
பேய் இரைச்சலில்
சிகரெட்டின் முனைதவிர்த்த
இடங்கள் அனைத்திலும்
அடர்ந்துகிடக்கிறது
கருப்பு.

ஓயாமல் பேசும் வாய்
பதில் கதவைத் திறக்காமல்
சொற்களைப் பிணமாய்
இருத்தி வைத்திருக்கிறது.

கூட்டம் கூட்டமாக
தனியாக
வரிசையாக
இணைந்து
முன்னேமுன்னேவென்று
புகை அப்பிய
வானத்தை நோக்கி
உணர்ச்சியற்று
உட்கார்ந்திருக்கிறது
எதிர்காலம் குறித்த
ஒற்றைச் சம்பவம்

"என்ன ஒரேமுட்டா யோசனை ?"
"முப்பாட்டனை நெனைச்சிக்கிட்டிருந்தேன்"

கனன்றுகொண்டிருக்கிறது
கருஞ்சுருட்டு முனையின் கங்கு
வெளிச்சத்தின் எல்லைதொட்டு.

எரிதழல் கேட்கிறது
சொரணையுள்ள
சுடுகாட்டுப் பிணங்கள்.

- மகரந்தன்

No comments: