அது ஒரு புனிதப் பொழுது
சூரியன்
பொழுதின் மடியில்
தலை சாய்கிறான்
நான் உன் மடியில்
தலை வைத்திருக்கிறேன்.
வானம்
தேசத்தின் நெருக்கடி நிலையை
நினைவூட்டுகிறது.
"மழை வருமா?" என்கிறேன் நான்.
"சாரலே அடிக்கிறது" என்கிறாய்
ஆம்!
உன் கண்களில் மின்னல்.
நிர்வாணத்தைக்
குடைகளாக்குகின்றோம்
நம்முள்
மழையடித்து ஓய்கிறது.
அந்த அந்திக்கும்
வெட்கம் போலும்
இருட்டு முக்காட்டை
இழுத்துப் போர்த்திக்கொள்கிறது.
அது ஒரு புனிதப் பொழுது.
- மகரந்தன்.
அறியப்படாத புதுச்சேரி – 3
-
இந்திய இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புதுச்சேரி
இந்திய இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு இரவீந்திரநாத் தாகூரின் வாயிலாக மேற்கு
வங்கம் வித்திடுவதற்கு ...
11 years ago
No comments:
Post a Comment