Friday, June 27, 2008

நீ காதலிக்கிறாய் என்றால் . .

இணைக்க
நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்
நீ ஏன் என்னை அழைக்கக் கூடாது ?
எப்போதும் உன்னை
கைப்பேசியில் அழைப்பது
நானாகத்தான் இருக்க வேண்டுமா ?

நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்
பிறகு நீ ஏன் என் கைகளைப்
பற்றிக்கொள்ளக் கூடாது;
நாம் வெளியே போகும் போதெல்லாம் ?

நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்
பிறகு ஏன் மன்னிப்பு கேட்கிறாய்
என்னைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு.

நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்
அருகில் செல்லும்
அழகானப் பெண்களைக் காணும்போதெல்லாம்
என் எதிரிலேயே
உன் கண்களில் ஏன்
காமம் கசிகிறது.

நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்
என்னை ஏன் அடிமைப்படுத்த
எண்ணுகிறாய்?
நான் மாறவேண்டும் என்று
ஏன் நிர்பந்திக்கிறாய்?

ஏனென்றால். . . .
நீ
என்னைக் காதலிக்கவே இல்லை.
ஆனால்
அதை சொல்லத் தைரியமற்று தயங்குகிறாய்.

நீ தயங்குவதைக் கண்டு
என் மனம் புண்படுகிறது.

நான்
உண்மையை ஏற்றுக்கொள்வதைத் தவிர
ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை.

நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்.

- மகரந்தன்

No comments: