Friday, January 28, 2011

இரவு நெறிகள்

இணைக்க



இரவு நெறிகள் 

மரணம் -
தொங்கிக் கொண்டிருக்கிறது கனமாக
துர்நாற்றமெடுக்கும்  இரவின் காற்றில்.

அது வீசுகிறது
வெள்ளை நடைபாதையான
எனது எலும்புகளின் ஊடாக.

சுருள் படிக்கட்டுகளான
எனது முதுகெலும்பில்
அதன் அழுத்தமான காலடிகள் ஏறும்போது,
அதன் அமைதி,
எனது இரத்தக்கதவுகளைச்
சன்னமாகத் தட்டுவதை
நான் கேட்கமுடியுமா ?

அல்லது -
மின்னும் கூர்மையான கட்டாரியின் முனையால்
அறுபடும் இடைவெளியில்
அதிரும் இரவின் சதைபோல்
அது கீழிறங்கி வருமா ?

வாழ்வென்பது
ஒரு தனிப்பறவை
உடற்கூண்டிற்குள் மாட்டிக்கொள்வது.

நிலவின் விழிப்பான விழிகள்
நான் எங்கு சென்றாலும் பின்தொடர்கிறது.

மேலும் -
எனது வீட்டுமுற்றத்தில்
திமிர்த்த மரங்கள்
எதிர்த்து நிற்கின்றன
முகமுடி அணிந்த தீவிரவாதிகள்
என்னை நோக்கி
அவர்களது துப்பாக்கி முனையை நீட்டியிருப்பதைப் போல்   

  ஆங்கில மூலம் : துர்கா பிரசாத் பாண்டே 
  தமிழில் : மகரந்தன் 



No comments: