Saturday, October 20, 2007

உளிகள்

இணைக்க
எதிரி என்றா அவர்களை
விமர்சனம் செய்கின்றாய்.


அவர்கள் சிற்பிகள்
எனவே செதுக்குகின்றனர்
வடிவம் பெறுகின்றாய்.

முழுமையானதும்
வடித்தவனே வணங்க வருவான்
ஏனெனில்
அப்போது நீ
தெய்வம்.

2 comments:

கோவி.கண்ணன் [GK] said...

மகரந்தன் ஐயா,

எதிர்மறை பொருளில் சிறப்பாக இருக்குங்க !

மகரந்தன் said...

நன்றி, ஐயா!

- மகரந்தன்