Saturday, October 20, 2007

செக்குமாடுகள்

இணைக்க
புதிதாய் எதையும்
எழுதவே இல்லை.

ஆயினும்
எழுதி எழுதியே
தீர்ந்துபோனது
மைக்குச்சி.

சுற்றத்தார் கூடி
'உச்' கொட்டி
பழம்பெருமையில் தூக்கிப்போட்டனர்.

கடைசியில்
வேறொன்றை எடுத்து
நிரப்பிக் கொண்டனர்.
அதுவும் ஒருநாள் . . .

1 comment:

கோவி.கண்ணன் [GK] said...

மகரந்தன் ஐயா,

உங்கள் கவிதைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. தமிழ் மணத்தில் இணைந்து எழுதவந்ததற்கு உங்களை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன் !

அன்புடன்.

கோவி.கண்ணன்