
கல்லூரி போகப் படியிறங்கினால்
அங்குதான் போகின்றேனா
என்ற
பக்கத்து வீட்டு மாமியின்
போலீஸ் பார்வை
வீதியில் இறங்கி
நடக்க ஆரம்பித்தால்
காலிப் பயல்களின்
விசில் பார்வை
வயோதிகனிடத்தில்
வாலிபப் பார்வை
வகுப்பறையில்
ஆசிரியரின்
கேள்விப் பார்வை
சக மாணவர்களின்
கேலிப் பார்வை
பஸ்ஸிற்கு நிற்கையில்
ரோமியோக்களின்
காதல் பார்வை
பஸ்ஸிற்குள் எத்தனையோ
உரசல் பார்வை
தனித்து நடந்தால்
தனியே அழைக்கும்
"சிகப்பு" பார்வை
வேட்டைக்கு தப்பி
வீட்டுக்கு தந்தால்
என் புத்தகங்களில்
கடிதம் தேடும்
உன்னிடத்தில்
சந்தேகப் பார்வை
நீயுமா அம்மா . . . .
- மகரந்தன்
No comments:
Post a Comment