
எலிகளுக்கு எப்போதும்
பூனைப் புராணம்தான்
காதோடு காதாக
எலிகள் பேசிக்கொண்டன
"பூனைக்கு மணிகட்ட வேண்டும்"
யார் கட்டுவது?
அவைகளுக்குள் குழப்பம்
கூடவே இல்லை
உடைந்து உடைந்து
அணிகள் தோன்றின
ஒத்துவந்தவை
கூட்டணி வைத்தன.
தனித்து நின்றவை
சோரம் போயின
அவைகளுக்குள்ளும்
அடிதடிச் சண்டை
மணிகட்டும் விஷேயம்
மறந்தே போயின
வந்து சேர்ந்தன
வாக்குப் பெட்டிகள்
எதிரே வந்த
பூனையைக் கண்டதும்
எலிகள் போட்டது
வாக்குகள் அல்ல
புழுக்கைகள்
எலிகளுக்கு இன்னமும்
பூனைப் புராணம்தான்
வீட்டு முதலாளி சென்னார்
"இன்னும் இரண்டு
பூனைகள் வளர்த்தால் தேவலை
எலிகளின் தொல்லை
தாங்க முடியவில்லை"
- மகரந்தன்
No comments:
Post a Comment