இதயத்திலிருந்து விழிவரை
நீர் நிரப்பப்படும்
அதன்பிறகு
நீ ஏரியைக் கண்டடைவாய்.
சீக்கிரம் !
உன்னால் சாலைக்கு வர இயலாது
ஒருமுறை
வானம் நினைவுகளால் மனதை நிறைத்தது.
நதி கொண்டுவந்தது
கானல் நீரின் விலாசத்தை;
காகிதப் படகு சொன்னது
நீந்துவது சாத்தியமென்று.
நான் என்னை ஒரு விளக்காய்
வெளிச்சமாக்கிக்கொண்டால் என்ன ?
நீ ஒரு கடுங்காற்றாய் வீசு !
நான் வாழ்க்கை என்பதை
நீ ஒப்புகொள்ளாவிட்டால்,
மிக நன்று -
ஆனால் அதிலிருந்து வெளியேற்றப்படுவாய்
தவறாக வழி நடத்தப்படுவாய்.
இன்று,
மிகப்பெரிய முயற்சிகளால்
நான் என்னை மூடியிருக்கிறேன்.
இப்போது-
பல ஆண்டுகளுக்குப் பிறகு
நான் என்னை மாய்க்கிறேன்.
ஒரு முத்தைத் துளையிடுவது
உனக்கு சாத்தியமாகலாம்.
ஆனால்,
விரல் நுனியில் படரும்படி
கண்ணீர்த் துளிகளைத் துடைக்க முடியுமா ?
நான் மரிக்கிறேன்
என்னைப் பிடிக்கும் விளையாட்டில்
உன்னால் முடிந்தாலும் என்னைக் காணாதே.
என்னைப் புதைக்கும்முன்
நீ உன்னை மறைத்துக்கொள்.
- ரவீந்தர பரேக்
குஜராத்தி மொழியிலிருந்து
ஆங்கிலத்தில் : திலீப் ஜாவேரி
தமிழில் : மகரந்தன்
1 comment:
நல்ல பதிவு நண்பரே ..
Post a Comment