Friday, June 11, 2010

மாலத்தீவு எழுத்தாளருடன் ஒரு சந்திப்பு

இணைக்க
மாலத்தீவு எழுத்தாளர், பண்பாட்டுச் செம்மல் சாகித்திய அகாதெமி பிரேம்சந்த் ஆய்வுநிலை விருது பெற்ற அறிஞர் திரு. இப்ராஹிம் வஹித் அவர்களுடன் ஒரு மாலை சந்திப்பு நிகழ்ச்சி 10.06.2010௦ வியாழக் கிழமை மாலை 6.00.௦௦ மணியளவில் அண்ணாமலை ஓட்டலில் நடைபெற்றது. சாகித்ய அகாதெமி தென்மண்டல பொறுப்பு அலுவலர் ஜா. பொன்னுத்துரை வரவேற்புரை வழங்கினார். சாகித்ய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் பு. ராஜ்ஜா, மாலத்தீவு எழுத்தாளர் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.  திரு இப்ராஹிம் வஹித் அவர்கள் தனது இலக்கிய அனுபவங்கள், படைப்புகள் குறித்து உரையாற்றினார். பின்னர், புதுச்சேரி எழுத்தாளர்கள் மாலத்தீவு எழுத்தாளருடன் கலந்துரையாடினர். நிறைவாக சாகித்ய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர்  மகரந்தன் நன்றி கூறினார்.














No comments: