நேற்றைய தவறு
கண்கள் இரண்டும்
வேறுவேறு திசைகளைக் காட்ட
காதுகள்-
காததூரத்திற்கு அப்பால் கேட்கும்
எச்சரிக்கை ஒலியைக்
கேட்கும் ஆர்வத்தில் இருக்கிறது.
நாசி –
துவாரங்கள் தூர்ந்தது போன்று
செத்துக்கிடக்கிறது
வாய் –
வார்த்தைகளை பூட்டிக்கொண்டு
புன்னகையை
கேளிசெய்கிறது.
முகம் எண்கோணலாக
சுழிந்து கிடக்கிடக்கிறது.
ஒரு மார்பளவு புகைப்படத்தில்
இத்தனை ஒழுங்கீனங்கள் !
இருக்கட்டும்.
நேற்றைய தவறு
இன்றெப்படி சரியாகும் ? - மகரந்தன்
No comments:
Post a Comment