Tuesday, September 22, 2009

மயானத்தில் மேயும் மனம்

இணைக்க


வீசும் காற்றின் வலுவுக்கேற்ப
கீழிறங்கி, மேலேறி
இலாவகம் காட்டி
அசைந்து அசைந்து
அந்தரத்தில் மிதந்தபடி
அது.

எந்த இலாவணிக்கு
இப்படி இலாவகம் காட்டுகிறதோ !

எதிர்ப்படும்
மரக்கிளையில் முட்டி
கீழே விழுந்துவிடுமோவென
அஞ்சுகையில்
விசுக்கென மேலெழுந்து
வட்டமடித்து
நின்று நிதானித்து
"ஏமாந்தியா" என்றபடி
மேலெழுந்து, கீழிறங்கி
அசைந்து அசைந்து
அந்தரத்தில் மிதந்தபடி
தகவமைப்பின் சுழிப்பென
அந்த இறகு.

0

அது -
யாருடைய மௌனம் ?
இறந்தபின் எழுந்ததா ?
அதற்கு முன்பே உதிர்ந்ததா ?
அதன் மிருது எத்தகைய தன்மையது ?
மயிரிழைகள் எத்தனை இருக்கக்கூடும் ?
எப்படி வாய்த்தது
இந்த செப்படி வித்தை ?

ஏமாற்றத்தின் எச்சத்தில்
ஆராய்ச்சிக் கூடத்தைக்
கட்டியெழுப்பும்
மயானத்தில் மேயும் மனம்.

- மகரந்தன்

No comments: